Showing posts with label ஆடுகளம். Show all posts
Showing posts with label ஆடுகளம். Show all posts

Wednesday, November 17, 2010

வளர்பிறை

நீர் கோர்த்து உடலை
வளையிட்டு நெருக்கியதால்தான்,
தென்னை,
நெடிதுயர்ந்து விண்ணைத்தொடத் துடிக்கிறதோ?
உனை என் நெஞ்சில் இறுக்கியதால்தான்,
என் நிழல்,
எப்போதும் உனைத்தொட நீள்கிறதடி..

வேலியடைத்த ஆடு அது,
புல்லையன்றி வேறறியாது..
குளிர்க்காற்றை அடைத்துவைத்த மேகம்,
நீரையன்றி வேறெதுவும் பொழியாது..
உன்னை மட்டும் அடைத்துவைத்த நெஞ்சமடி,
உன் அன்பொன்றிலே இயங்குமது,
என் அன்பையன்றி வேறெதுவும் தாராது..

முடிகொடுத்து அருள்பெறவேண்டி,
தினம் படியேறிச் செல்வோர்களுண்டு..
உன் அன்பைப்பெறும் எண்ணத்தில்,
உன் கண்களுக்குள் இறங்குகிறேன்..

Thursday, October 8, 2009

ஆடுகளம்..

நீலவண்ணப் பட்டுச் சீலையாம்..
முந்தியை உதறியாட்டுகிறாளாம்..
விளக்கொளியும், மின்மினிகளும் மறைந்தும் போகலாம்..
சரிகைத் துளிகளையும், பதித்துப் புதைத்த
முத்துக்களையும் கொணர்ந்தால் கிட்டுமாம்,
அடுத்த ஆட்டத்திற்க்கான தாயம்..

Ref: ஆடுகளம்..