Showing posts with label பட்டம். Show all posts
Showing posts with label பட்டம். Show all posts

Friday, May 14, 2010

பட்டம் விடுதல்

அறுந்து விழும் பட்டங்கள்,
சீதக்காதிகள் தான்..
எதிர்வீடு, அண்டை வீடென்று
பாரபட்சம் பார்க்காதவை..

அந்தியின் மஞ்சளைத்
திருடித் திரித்தாற்போன்ற சுடிதார்..
கதிரவன் கண்டுகொண்டானோ அன்று,
இவனது கொள்ளிக்கண்கள்,
குறுகுறுப்புடன் கூடிய குழப்பத்தினால்,
வெளிறிப் பார்த்தன..

சட்டெனக் காய்ந்திருக்க வேண்டும்..
கதிரவனுக்கு விடுப்பளித்து விட்டான்..
சென்றவன் பழிதீர்க்க,
மேகங்களை அனுப்பினான்..

மச்சிலிருந்து இறங்கியவன்,
எதிர்வீட்டுத் திண்ணையின் சிரிப்பொலியில்,
மழலையும் இருக்கக்கண்டான்..

நீர்காற்று கலந்து பெருத்து உருவாகும்,
குமிழியின் ஆயுளும் பெரிதாமோ?

நனைந்த தாடையில் கலந்து,
கரைந்து கொண்டிருந்தது,
நீர்தான்..