பற்கள் வலுப்பெறும் வரை,
உன் இரத்தம்..
ஆசனவாய் அறிதலுக்குமுன்,
உன் முடிவே, வெளியிருத்தல்..
முட்டிகள் வலுப்பெறும் வரை,
உன் யாக்கை முழுதும்..
மூளை வலுப்பெறும் வரை,
உன் வார்த்தைகள், ஓசையாய்..
கிரகிக்கும் அத்தனையும்
மோதிப் பிணைந்து நிற்க,
மேலைக்காற்றின் புழுதியில்
உருண்டோடி வந்த குப்பைப்பந்தானதென் மூளை..
பிணக்குகள் பல்கிப்போன நரம்புகளின் முடிவுகளில்,
தூசி எறிந்துபட்டதென உணரும்போதெலாம்,
உன்னின்று வெட்டப்பட்ட நகமாவேன், மயிருமாவேன்..
வலுவிழந்து, உயிரிழந்து, மண்ணாவேன்..
Showing posts with label மயிர். Show all posts
Showing posts with label மயிர். Show all posts
Tuesday, May 11, 2010
Subscribe to:
Posts (Atom)