வண்ணத்துப்பூச்சிகள் மலிந்து பரவியிருந்தன..
சிலவற்றைப் பிடித்துச் சிறையிலடைத்தேன்..
வண்ணங்கள் அரிதாகின..
விலை உயர்ந்ததாயுமிருந்தன..
தூரிகைகள் தினவெடுத்துத் திரிந்தன..
பாவைக்கூத்தைக் கண்ட நாள்முதல்,
இவற்றை ஆட்டியிழுத்துப் பார்க்கத் தோன்றியது..
வண்ணக் குழைவுகள் தீர்ந்ததைப்
பாராமுகம் கொண்டு தொடர்ந்தேன்..
சில மணித்துளிகள் கழித்து,
குழைவுகளின் தேவையற்றுப் போனதாய்,
இரோமக்கற்றைகளில் ஊற்றுப்பெருக்காய்,
வேண்டிய வண்ணங்கள் மெல்லக் கசிந்தன..
வியர்வையின் சுவையோ, வாசனையோ
அறியாதவனாய்,
இரத்தவாடை வீசியதை,
உயிருள்ள ஓவியமென,
பெரும்பொருளுக்குப் பேரம்பேசினேன்..
Pic: Free Digital Photos
Showing posts with label ஓவியம். Show all posts
Showing posts with label ஓவியம். Show all posts
Thursday, July 8, 2010
Subscribe to:
Posts (Atom)