Showing posts with label அப்பா. Show all posts
Showing posts with label அப்பா. Show all posts

Sunday, September 5, 2010

கல்லேணி

ஏணிகளில் பலவகையுண்டு..
செங்குத்தாய், பற்றி ஏறும் கயிறைப் போன்றவை..
கடந்து செல்பவன்,
கயிறையோ, ஏறிச்செல்லும் படிகளையோ,
உயிராய்க் கருதவேண்டும்..

தட்டையாய், பாலத்தைப் போன்றவை..
செல்பவனின் அகமாற்றத்தைப்
பெரிதும் உதாசீனப்படுத்துபவை..

இடைப்பட்டவையே,
ஒருவனிடத்து அக, புற மாற்றங்களைக்
கொடுக்க வல்லவை..

சில படிகளில்,
நெருஞ்சி முற்களைத் தூவுவதும்,
அடுத்தவைகளில், நீரில் நனைத்த பஞ்சையும்
இட்டு வைத்து,
ஏறுபவனின் வேட்கைகளைத் தணிக்க முற்படும்..
சோர்ந்து, தளர்ந்து நிற்பவனை,
ஊக்கி, கைபிடித்து ஏற்றுவதும் நடக்கலாம்..
உச்சியேறி நடப்பவன் வந்தவழியை மறக்கலாம்..
வலுவேறிய கால்கள், அடுத்த படியைத் தேடும்..

இரும்பாலான ஏணிகள்,
என்றாவது துருப்பிடித்து,
தள்ளிவைக்கப்படலாம்..

கருங்கற்களாலானவைக்கு ஓய்வில்லை..
பாசி படியலாம், புதர் மண்டலாம்..
கும்பாபிஷேகங்கள் எதற்கு?