Wednesday, November 17, 2010

வளர்பிறை

நீர் கோர்த்து உடலை
வளையிட்டு நெருக்கியதால்தான்,
தென்னை,
நெடிதுயர்ந்து விண்ணைத்தொடத் துடிக்கிறதோ?
உனை என் நெஞ்சில் இறுக்கியதால்தான்,
என் நிழல்,
எப்போதும் உனைத்தொட நீள்கிறதடி..

வேலியடைத்த ஆடு அது,
புல்லையன்றி வேறறியாது..
குளிர்க்காற்றை அடைத்துவைத்த மேகம்,
நீரையன்றி வேறெதுவும் பொழியாது..
உன்னை மட்டும் அடைத்துவைத்த நெஞ்சமடி,
உன் அன்பொன்றிலே இயங்குமது,
என் அன்பையன்றி வேறெதுவும் தாராது..

முடிகொடுத்து அருள்பெறவேண்டி,
தினம் படியேறிச் செல்வோர்களுண்டு..
உன் அன்பைப்பெறும் எண்ணத்தில்,
உன் கண்களுக்குள் இறங்குகிறேன்..

5 comments:

  1. முடிகொடுத்து அருள்பெறவேண்டி,
    தினம் படியேறிச் செல்வோர்களுண்டு..
    உன் அன்பைப்பெறும் எண்ணத்தில்,
    உன் கண்களுக்குள் இறங்கிக் கொண்டிருக்கிறேன்.

    இவை இரண்டிற்கும் என்ன தொடர்பு?

    ReplyDelete
  2. படியேறுவது - மனம் விரும்பி, உடல் வருந்தச்செய்வது
    கண்களில் இறங்குவது - மனம் விரும்பி, மனம் மகிழச்செய்வது.

    ReplyDelete
  3. "இறங்குகிறேன்" னு இருந்தா நல்லா இருக்கு..

    ReplyDelete