Saturday, August 7, 2010

சூனியத்தில் ஞானோதயம்

மெல்ல மெல்ல ஓடியவன்,
மலைமுகடுகளுக்குள் ஒளிந்தபடி மேலெழும்பி,
மேகங்களுள் மறைந்திருந்தான்..
அடுக்கடுக்காகத் தாவிச்சென்று,
நகர்ந்துகொண்டிருந்த கதிரவனை
இருகரம் கொண்டு அள்ளி,
வைத்திருந்த மண்சட்டிக்குள் போட்டுமூடி
சூனியத்தில் தொலைந்து போனான்..

ஆன்மாக்கள் சிலவற்றை சொஸ்தப்படுத்த
வருடங்கள் ஆகுமென்றும்,
காலத்தை நிறுத்தினாலொழிய நடக்காதென்றும்
குரு  அருளியதால்,
ஞாயிறு மறைந்தால் நலமென்று
எண்ணினான் போலும்..














காயத்ரி மந்திரங்களும்,
தொழுகைகளும்
சற்று பொறுத்திருக்கலாம்..
பரமாத்மாக்களின் பின்மண்டை வட்டங்கள்
சிலகாலம் சுழலாமல் ஓய்வெடுக்கலாம்..

இருளில்,
சொஸ்தப்பட்ட ஆன்மாக்கள்
பரமாத்மாவாகும் தருணம்,
மண்சட்டி உடைந்து
பட்டொளி வீசும்..

சூனியத்தில்,
தொலைந்தவன்,
மறுபிறவியில் சொஸ்தப்படுத்தலாம்..

1 comment:

  1. ella postukum ithai poda mudiyaathu, inimel un post podum kaiodu athuku oru porulurai tharichu personala anupidu....:(

    ReplyDelete