Saturday, March 12, 2011

உயிர்ப்புள்ள கண்கள்

கண்கள்தான் எவ்வளவு கொடுத்துவைத்துள்ளன..
விடியலின் பனிக்குளிரோடு,
வண்டியோட்டும் வேகத்தில் நீர்சேர்த்த கண்கள்,
காணும் பொருளையெல்லாம் கபளீகரமிட்டன..

இதோ, வெளிர்நீளப் பூந்தோட்டம்,
மடிப்புக் கலையாத புதுப்புடவையாய்ப்
பரந்து விரிந்திருக்கிறது..

அடுத்த மைல்கல்லின்மேல்,
தன்கூட்டில் உறங்கிக்கிடந்த நத்தையொன்று,
நான் கடந்துசென்ற பின்னராவது,
வெளிவந்திருக்க வேண்டும்.

இது என்ன,
பேருந்தில் அடிபட்ட ஒருவன்,
பாவம்,
உய்ய விழைகிறான் போலவே?
இரத்தம் உறைந்துபோயிருந்தது..
கண்டிப்பாக என்னுடையதில்லை..

சென்றமுறை வந்தபோது,
கொள்ளை அழகுடன் படர்ந்திருந்த
ஏரி,
வறண்டுபோகாமல் இருக்க
உளமாற வேண்டியபடியே
வண்டியை முறுக்கிச் செல்கிறேன்..

No comments:

Post a Comment