Monday, March 7, 2011

கயல்

நீலப்பெருவெளியில் நீந்தித்திரிய ஆசைதான் உனக்கு..

ஓரளவுக்குப் பழகியும் இருந்தாய்..
எதிர்வரும் அலைகளை எம்பித்தாவி,
வெதும்பும் படுகையினின்று உள்ளிறங்கி,
பவழப்பாறைகளை முத்தமிட்டாய்..
அனைத்துக்கும் தோழிமாருடனே..

தூரத்துக் கதிரவன்மேல் மையல் கொண்டாய்..
தொட்டுவிட எத்தனித்து இரந்துநின்றாய்..
தோழிமார் இல்லையடி,
உன் துடுப்புகளுடன் துணைநிற்க..

உன் பெரிய வலப்பக்கத் துடுப்பிலே,
நார் ஒன்று பற்றி இழுத்தது..
பலகாலம் சுற்றித்திரிந்து,
உப்பங்கழியில் ஓய்வெடுக்கும்,
உன் தாயிடத்தில் முடிந்ததது..

உப்பங்கழியில் உறைந்திடுவாய் சிலநாளே..
தாய் பற்றிய நாரின்
மறுமுனையைப் பற்றி,
உன் கயல்விழியில் கரைந்து,
துள்ளிக்குதித்துச் சுற்றுலா செல்லக்
கூடிவரும் உறவு..

நீலப்பெருவெளியில் நீந்தித்திரிய ஆசைகொள் தோழி..

No comments:

Post a Comment